பொய் ஆவணம் தயாரித்து சமர்பித்த எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் மீது குற்ற நடவடிக்க எடுக்க விண்ணப்பம்

நாள் : 29.05.2015
பெறுநர்

1. உயர்திரு. நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்கள்,
807, அண்ணாசாலை,
சென்னை -2.

2. உயர்திரு. நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனர்,
கன்டோன்மெண்ட்,
10, வில்லியம்ஸ் சாலை,
திருச்சிராப்பள்ளி

ஐயா,

பொருள் : பல மாடி கட்டிட உபயோகப்பகுதியாக அறிவிப்பு செய்ய கோருதல் – திருச்சி மாவட்டம், ஆய்குடி ஊராட்சி மற்றும் இருங்களுர் ஊராட்சி பகுதிகள் – எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி நிறுவனத்திற்கு மருத்துவ கல்லூரி உபயோகிக்க பலமாடி கட்டிடமாக பொய் ஆவணம் கொடுத்து அனுமதி பெற்றது – குற்ற நடவடிக்கை எடுக்கவும் அனுமதியை ரத்து செய்யவும் பணிவான விண்ணப்பம்

பார்வை : 1. நகர் ஊரமைப்பு சென்னை அறிவிக்கை ந.க. 8060/2011/சிபி நாள் 04.02.2013
2. நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனர், திருச்சி கடிதம் ந.க.எண் 1893/10-திம.2 நாள் 21.05.2012
3. மணச்சநல்லூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கடிதம் ந.க.தி2-1617/2015 நாள் 19.5.15
4. இருங்களுர் மற்றும் ஆய்குடி ஊராட்சி செயலர் மற்றும் பொது தகவல் அலுவலர் கடிதம் நாள்
இல்லை

திருவாளர்கள் எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி நிறுவனத்தினர் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் இருங்களுர் மற்றும் ஆய்குடி கிராமத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பலமாடி கட்டிட பகுதியாக அறிவிக்கை செய்ய சில பொய்யான ஆவணங்களுடன் நகர் ஊரமைப்பு துறை, உதவி இயக்குனர், திருச்சிக்கு கடிதம் எழுதி அதன் அடிப்படையில் அவர்கள் கொடுத்த பொய்யான ஆவணங்களை நம்பி பார்வை 2-ல் கண்டபடி திருச்சி உதவி இயக்குனர் அவர்கள் பரிந்துரை செய்து இருந்தார்கள். மேற்கண்ட பார்வை 2-ல் கண்ட கடிதத்தில் இனம் 1-ஆக நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் கூறிய படி ஆய்குடி ஊராட்சி மன்ற தீர்மானம் எண் 84 நகல் பெறப்பட வேண்டும் என்பதற்கு பெறப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்கள். மேற்கண்ட தீர்மானம் மனுதாரரின் 7.7.2011 தேதிய கடிதப்படி பெறப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்கள்.

அதேபோல் அவர்களது கடிதத்தில் இரண்டு ஊராட்சியும் இதற்கு அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக குறிப்பிட்டு அறிக்கை செய்தார்கள். அதன் அடிப்படையில் பார்வை 1-ல் கண்டபடி மருத்துவ கல்லூரியாக இயக்குவதற்கு பலமாடி கட்டிடம் கட்ட அனுமதி அளித்து அறிவிக்கை செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் இருங்களுர் மற்றும் ஆய்குடி ஊராட்சி மன்றத்தில் அவ்வாறு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த விபரத்தை பார்வை 3 மற்றும் 4-ல் கண்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேற்கண்ட அலுவலர்கள் தெரியப்படுத்தி உள்ளார்கள்.

எனவே உரிய அனுமதி எதுவும் இல்லாமல் தீர்மானமும் இல்லாமல் ஊராட்சிமன்றத்தின் பெயரில் ஒரு பொய் ஆவணத்தை எஸ்.ஆர்.எம். நிறுவனத்தினர் தயாரித்து அவர்களது 7.7.2011 தேதிய கடிதத்தோடு இணைத்து உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து இந்த அனுமதியை பெற்றுள்ளார்கள். எனவே இது இந்திய தண்டனை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இது சம்பந்தமாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட வேண்டியதும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டியதும் அவசியம் ஆகும். எனவே அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பணிவாய் கேட்டுக் கொள்கிறேன்.

பார்வையில் கண்ட நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குனரின் கடிதம் மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் கடிதம் எழுதப்படவில்லை என தெரியப்படுத்திய கடித நகலும் இத்துடன் இணைத்துள்ளேன்.

மேலும் இந்த சதி செயலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உண்டா என்பது பற்றி சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டியதும் அவசியம்.

நன்றி
தங்கள் உண்மையுள்ள

எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Aaikudy and Irunkalur Panchyat president lr Town and country planning lr reg SRM Trichy 21.5.12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *