Copy of Complaint petition send to Central and State Govt., authorities to initiate action against Valliammal Society of SRM University for violating Fire Laws, Town and Country Planning Laws, Building laws and for not obtaining permission from the statutory authorities with a request to stop the operation from the unauthorized building and to take over Valliammal Society and SRM University to Government to protect the life and future of the…
Tag: SRM Engineering College
சட்ட விதிகளை மீறி செயல்படும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுப்பிய புகார் மனு நகல்
அனைத்து சட்ட விதிகளையும் காற்றில் பறக்க விட்டு பாதுகாப்பற்ற கட்டிடங்களில் செயல்பட்டு சட்ட விதிகளுக்கு முரணாக கட்டிடம் கட்டியதற்கு குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ள வள்ளியம்மை சொசைட்டியின் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஏழை மாணவர்களின் நலன் காக்க மேற்கண்ட பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தவும் கேட்டு அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிய புகார் மனு மற்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள புகார்களுக்கு ஆதாரமான ஆவண நகல்கள் மனுவை பதிவு அஞ்சலில் அனுப்பப் பட்டுள்ளது. மாணவர் நலனில் அக்கரை கொண்ட அனைவரும் இதனை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் மக்களிடம் இதற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி…
தீயணைப்பு அனுமதியில்லா கடைகள் இடிக்கப்படும் போது தீயணைப்பு அனுமதியில்லா வள்ளியம்மை கல்லூரிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு?
பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் நிறுவனத்தை சேர்ந்த வள்ளியம்மை பொறியியல் கல்லூரிக்கும் தீயணைப்பு துறையால் வழங்கப்பட்ட தற்காலிக தடையின்மை சான்று காலாவதியாகி விட்டது. தற்போது அது தீயணைப்பு துறையின் செல்லுபடியாகும் தடையின்மை சான்றோ அல்லது உரிமமோ இன்றி இயங்கி வருகிறது. இதோ கோட்ட தீயணைப்பு அலுவலரின் தடையின்மை சான்று நகல்.
எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 45,000 மட்டுமே
எஸ்.ஆர்.எம் குரூப் நிறுவனத்தின் ஈஸ்வரி பொறியியல் கல்லூரிக்கும், வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரிக்கும் அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் 45,000 மட்டுமே. இதோ அண்ணா பல்கலைக்கழகத்தின் கடித நகல். பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பெற்றோர் பள்ளிகளை முற்றுகையிடுகிறார்கள். ஏன் அதிக கட்டணம் வசூலிக்கும் இம்மாதிரி கல்வி நிறுவனங்களை பெற்றோர்களோ அல்லது மாணவர்களோ முற்றுகை இடவில்லை. இந்த தகவலை தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பரவ செய்து ஏழைகளுக்கு நியாயமான விலையில் பொறியியல் கல்வி கிடைக்க செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா!!